மாற்றங்கள் ஒன்றே மாறாதது

ஊக்கம் கொடுப்பவன்

ஊக்கம் கொடுப்பவன்
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

Followers

எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்க்க கிளிக் செய்யவும்

Wednesday, January 21, 2015

பென்சில்

பென்சில் போல் வாழ்ந்தால் வெற்றிதான்!


           ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார்.அவரது வெற்றிக்கெல்லாம் யார் காரணம் என்று நிரூபர்கள் கேட்டார்கள்."இவர்தான்" என்று சுட்டிக் காட்டினார்.அவர் காட்டிய திசையில்,தங்க ஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிரூபர்கள் திகைத்தார்கள்.அவர் சொன்னார்,இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத்தந்தது.



 பென்சில்
                           -பல விஷயங்களை எழுதுவதற்கும்,வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில்       ஒப்படைக்கிறது.
                   
                       -அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம்
                       சீவும் போதெல்லாம் கூர்மையடைகிறது.
                   
                      -தவறுகள் செய்தாலும்,அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.
                   
                      -வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.
                   
                     -சின்னஞ்ச்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது.
                      கடைசி வரை  தன் சுவட்டை காகிதத்தில் பதிக்கிறது.

 இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன் 
                 
           -பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவிதான் என்கிற அடக்க உணர்வோடு என்னை
                    முழு ஈடுபாடோடு செய்யும் வேலையில் ஒப்படைத்திருக்கிறேன்.
                 
                 -சோதனைகள் வரும்போதெல்லாம் மேலும் மேலும் கூர்மையாக்கிக் கொள்கிறேன்.
               
                  -தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.
                 
                   -வெளிச்சூழலில் புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் இருக்கிறேன்.
                  -
                  கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்-காலத்தில் நம் சுவட்டைப் பதித்துவிட
                    வேண்டும் என உறுதியாக இருக்கிறேன்"என்றார்.

 கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, பெரிய பெரிய விஷயங்கள் பென்சிலில்  இருப்பது தெரிய வந்தது.
                  -

சிவராமன் அவர்கள்  நம்பிக்கை ஜூன் 2005 மாத இதழில் எழுதியது

No comments:

Post a Comment

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

தொடர்புடைய பதிவுகள்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out