1.தமிழ்:'மாம்பழம் இன்னும் பழுக்கவில்லை,காயாக இருக்கிறது'என்பதை ஆங்கிலத்தில் எப்படி சொல்ல வேண்டும்?
ஆங்கிலம்:'The Mango has not ripened yet, it is still raw' என்று சொல்லுங்கள்.
2.தமிழ்:'சும்மா சீன் காட்டாதே'என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்ல வேண்டும்?
ஆங்கிலம்:'Don't showoff'என்று சொல்ல வேண்டும்.
3.தமிழ்:'ஆனந்தக் கண்ணீர்'என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்ல வேண்டும்?
ஆங்கிலம்:'Tears of Joy' என்று சொல்ல வேண்டும்.
4.தமிழ்:'நான் யார் தெரியுமா?'என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கேட்பீர்கள்?
ஆங்கிலம்:'Do you know who i am?'என்றும்'Are you aware who i am?'என்றும் கேட்கலாம்.
5.தமிழ்:'எனக்கு நேரமே இல்லை'என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்ல வேண்டும்?
ஆங்கிலம்:'I have no time at all' என்று சொல்ல வேண்டும்.
6.தமிழ்:'நான் சொன்னதை யாரிடமும் சொல்லாதே' என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்?
ஆங்கிலம்:'Don't tell anybody what I said' என்றும் 'Don't tell anybody what I told you' சொல்ல வேண்டும்.
7.தமிழ்:'ஏன் இவ்வளவு மெதுவா பேசுறே,பக்கத்தில் யாராவது இருக்காங்களா?'என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கேட்க வேண்டும்?
ஆங்கிலம்:'Why are you speaking in a low voice? Is anybody around you?' என்று கேட்க வேண்டும்.
8.தமிழ்:'மன்னிக்கணும் ரொம்ப லேட் ஆயிடுச்சு.இன்னிக்குப் பயங்கர டிராஃபிக்' என்பதை ஆங்கிலத்தில் எப்படி சொல்ல வேண்டும்?
ஆங்கிலம்:'Sorry I am late. there is so much of traffic today' என்று சொல்ல வேண்டும்.
9.தமிழ்:'நானே சொந்தமா பிசினஸ் பண்ணிகிட்டிருக்கேன்' என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்ல வேண்டும்?
ஆங்கிலம்:'I am in business on my own' என்று சொல்ல வேண்டும்.
10.தமிழ்:'பணத்துக்கு என்னப் பண்ணப் போற?'என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்ல வேண்டும்?
ஆங்கிலம்:'What will you do for money?' என்று சொல்ல வேண்டும்.
11.தமிழ்:'தினம் ஒரே மாதிரியான சாப்பாட்டைச் சாப்பிட்டு அலுத்துப் போச்சு' என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்ல வேண்டும்?
ஆங்கிலம்:'I am tired of having the same food everyday' என்று சொல்ல வேண்டும்
12.தமிழ்:'அவளைப் பார்த்ததும் எனக்குப் பேச்சே வரலை' என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்ல வேண்டும்?
ஆங்கிலம்:' I became dumb struck when I saw her' என்று சொல்ல வேண்டும்.
புதிய தலைமுறை மலர் 5 இதழ் 24 இல் இருந்து எடுக்கப்பட்டது.
நன்றி:புதிய தலைமுறை
√
ReplyDeleteநன்றி ஐயா
Delete